2 ஏப்ரல், 2011

இலங்கை கிரிக்கெட் அணி வெற்றிபெற தொலைபேசியூடாக ரணில் வாழ்த்து



இன்றைய இறுதிப்போட்டியில் இலங்கை அணி உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்ள வேண்டும். அதற்காக அணியின் அனைத்து வீரர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை காலை இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்படி வாழ்த்தினைத் தெரிவித்திருப்பதாக எதிர்க்கட்சி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறியுள்ளதாவது:

எந்தவிதமான சவால்களையும் எதிர்கொண்டு அதனை வெல்கின்ற தன்மையை எமது நாடு கொண்டிருக்கின்றது. அந்த வகையிலேயே இலங்கை கிரிக்கெட் அணியும் நோக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் அணியின் செயற்பாடுகள், அதன் திறமைகளை அறிந்து வைத்திருக்கிறேன். இன்று நடைபெறவிருக்கின்ற இறுதிப்போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்பதே நாட்டு மக்களினது பாரிய எதிர்பார்ப்பாகும்.

எனவே, இலங்கை அணி வெற்றிபெற வேண்டுமென்று நாட்டு மக்களின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக