2 ஏப்ரல், 2011

அரச வைத்தியசாலைகளில் தனியார் வாட் வசதிகள் உடனடியாக அமுல்படுத்த திட்டம் அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்தது




உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பிரதான அரசாங்க வைத்தியசாலைகளில் கட்டணம் அறவிட்டு சேவை வழங்கும் தனியார் வாட் கட்டடத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதென சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு கடந்த 30 ஆம் திகதி அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

தனியார் வைத்தியசாலைகள் பொது மக்களிடம் அசாதாரமான முறையில் கட்டணங்களை அறவிடுவதாகவும், அவற்றிற்கிடையே நிலையான கட்டண முறையொன்று இல்லையெனவும், அதனால் நியாயமான விலையில் சேவையினைப் பெற்றுக்கொள் ளக்கூடிய வகையில் அரசாங்க வைத்திய சாலைகளில் தனியார் வாட்டுக்களை நிர் மாணிக்குமாறு நீண்டகாலமாக பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

(பொதுமக்களின் இவ்வகையான கோரிக்கைகளை கவனத்தில் எடுத்து அரசாங்கம் இத்தீர்மானத்தை மேற்கொண் டுள்ளதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறினார். கொழுபிற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ள இந்த வசதியினை இவ்வாண்டின் இறுதிக்குள் நாட்டின் அனைத்து பிரதான வைத்திய சாலைகளிலும் பெற்றுக்கொள்ளக் கூடியவாறு புதிதாக கட்டடத் தொகுதிகளை அமைக்க உள்ளதாகவும், இதன் ஆரம்ப நிகழ்வு அம்பாறை பெரிய ஆஸ்பத்திரி யிலிருந்து மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக