5 பிப்ரவரி, 2011

முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்ததில் ஒருவர் பலி






முச்சக்கர வண்டி மீது மரம் விழுந்ததில் ஒருவர் பலி பாதையில் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி மீது பாரிய மரமொன்று விழுந்ததில் மடவளையைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பன்விலைப் பொலிஸ் பிரிவிலுள்ள மடுல்கலை என்ற இடத்தில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதில் மரணமானவர் மடவளை பஸார் என்ற இடத்தைச் சேர்ந்த முஹமட் நிஸார் முஹம்மட் நதீம் (35) என்பவராகும். அதே இடத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான அப்துல் ஹசன் முஹம்மத் இர்பான்(28) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக