16 பிப்ரவரி, 2011

எமது பிரச்சினைகளை எம்மால் தீர்க்க முடியும் வெளிநாடுகளில் தவறான பிரசாரம் மேற்கொள்வது நல்லதல்ல

‘எமது நாட்டுப் பிரச்சினை களை எம்மால் தீர்க்க முடியும் என்பது நிரூபணமா கியுள்ள நிலையில் அவற்றை வைத்து வெளிநாடுகளில் தவறான பிரசாரங்களை மேற்கொள்வது எந்த விதத்தி லும் நல்லதல்ல என இல ங்கை தொழிலாளர் காங்கி ரஸின் தலைவரும் பிரதிய மைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார். நாட்டில் அமைதியற்ற யுகமொன்றிருந்தது.

தற்போது அந்த யுகம் மாற்றமடைந்து பூரண அமைதி நிலவுகின்றது. இத்தகைய தருணத்தில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்த முயல்வது சிறந்ததல்ல எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

முப்பது வருடகால நெருக்கடியான சூழல் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு நாட்டில் அமைதி நிலவுகிற காலகட்டம் இது. நாடு அபிவிருத்தியில் முன்னேற்ற மடைந்துவரும் இத்தகைய தருணத்தில் நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வெளிநாடுகளில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பில் கேட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

நமது பிரச்சினைகளை எம்மால் தீர்க்க முடியும் என்பதை ஜனாதிபதியவர்கள் தமது செயற்பாட்டின் மூலம் நிருபித்துக் காட்டியுள்ளார். நாட்டின் அமைதியற்ற சூழலை அமைதிச் சூழலாக மாற்றியமை இதற்கு சிறந்த உதாரணம்.

இத்தகைய அமைதிச் சூழல் நிலவும் வேளையில் அரசியல் நோக்கங்களுக்காக வெளிநாடுகளில் வீண் பிரசாரங்களைச் செய்வதோ பிரச்சினைகளை ஏற்படுத்துவதோ எவராயினும் சரி அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக