16 பிப்ரவரி, 2011

வடக்கில் மீண்டும் இனவாதத்தை பரப்புவதற்கு தீவிர முயற்சி






வடக்கில் மீண்டும் இனவாதத்தை பரப்பும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. அவ்வாறான முயற்சிகளை நாங்கள் நிராகரிக்கி ன்றோம். எனவே, இவ்விடயங்கள் குறித்து முக்கியமக்ஷிக தமிழ் ஊடகங்கள் கவனம் செலு த்தவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருகைன டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள மாகவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை கூறினார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது: 30 வருடங்களின் பின்னர் வடக்கு கிழக்கில் ஜனநாயகம் மலர்ந்துள்ளது. ஜனநாயக ரீதியில் தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஜனநாயக ரீதியில் உள்ளூராட்சிமன்றங்களுக்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் வடக்கில் மீண்டும் இனவாதத்தை பரப்பும் வகையில் தீவிர முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிகின்றது. இது தொடர்பில் ஊடகங்கள் கவனம் செலுத்தவேண்டும். முக்கியமாக தமிழ் ஊடகங்கள் இது விடயத்தில் சிந்தித்து செயற்படவேண்டும். அவ்வாறான முயற்சிகளை நிராகரிக்கவேண்டும். வடக்கில் மீண்டும் இனவாதத்தை பரப்பும் முயற்சிகளை நாங்கள் நிராகரிக்கின்றோம். இந்த தேர்தல் ஏன் தீர்க்கமானது என்பதனை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதாவது இலங்கை அரசியல் மிகவும் ஸ்திரமானது என்பததற்கான மக்களின் சான்றிதழை சர்வதேசத்துக்கும் காட்டும் தேர்தலாகவே இந்த தேர்தல் அமைந்துள்ளது. மக்களின் சான்றிதழ் இந்த தேர்தல் மூலம் எமக்கு கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக