29 ஜனவரி, 2011

நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு

உயர் நீதிமன்றை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபரை அது தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகி விளக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ள அம்பாறை முன்னாள் பொலிஸ் அதிகாரி ஜே.ஆர்.ஜயவர்த்தன தாக்கல் செய்த மனுவை பரிசீலனை செய்த பிரதம நீதியரசர் அசோக டி சில்வா உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் கொண்ட குழு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதன்படி பெப்ரவரி 11 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பொலிஸ் மா அதிபருக்கு முன்னறிவித்தல் கடிதம் விடுக்கப்பட்டுள்ளது.

பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ள தன்னை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்வதாக கடந்த டிசம்பர் மாதம் முதலாம் திகதி பொலிஸ்மா அதிபர் நீதிமன்றில் உறுதியளித்ததாக அம்பாறை முன்னாள் பொலிஸ் அதிகாரி தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அந்த உறுதியை மீறி கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி பொலிஸ்மா அதிபர் தன்னை மீண்டும் பணிநிறுத்தம் செய்துள்ளதாக அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பொலிஸ்மக்ஷி அதிபர் நீதிமன்றிற்கு வழங்கிய வாக்குறுதியை மீறிச் செயற்பட்டுள்ளதாக மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த மனுவை பரிசீலனை செய்த உயர் நீதி மன்றம் இது குறித்து விளக்கமளிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு முன்னறிவித்தல் கடிதம் அனுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக