29 ஜனவரி, 2011

சுவரொட்டிகள் ஒட்டுவோரை கட்சி பேதமின்றி கைதுசெய்ய உத்தரவு


தேர்தல் பிரசார சுவரொட்டிகள் ஒட்டுபவர்களை கட்சி பேதமின்றி கைது செய்ய உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி நேற்றுத் தெரிவித்தார். இது தொடர்பில் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு ஆரம்பிக்க முன்னரே பல வேட்பாளர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

வேட்பு மனுத்தாக்கல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்த நிலையில் அபேட்சகர்களுக்கான விருப்பு இலக்கங்களை வழங்க தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் கூடுதலான தேர்தல் சுவரொட்டிகள் ஒட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் சட்டத்தின் பிரகாரம் சுவரொட்டிகள் ஒட்டுவது சட்ட விரோதமானது என்று தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் அந்தந்த பொலிஸ் நிலையங்களினூடாக சுவரொட்டி ஒட்டுவோரை கைது செய்ய உள்ளதாக கூறினார்.

போஸ்டர்கள் ஒட்டப்பட்ட உடன் அவற்றை அகற்ற பொலிஸாருக்குப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக