29 ஜனவரி, 2011

வேட்புமனுக்கள் நிராகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அதிருப்தி

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பாக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சந்தித்து உரையாடியுள்ளார்.

கூட்டமைப்பு சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அதிக எண்ணிக்கையான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி இச் சந்திப்பின்போது அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே நேரம் இது தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக