29 ஜனவரி, 2011

ரணில் கட்சித் தலைவராக இருப்பதே ஐ.தே.க ஆதரவாளர்களின் விருப்பம்






எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் கட்சித் தலைவராக இருக்க வேண்டுமென்பதே அதிக மான கட்சி ஆதரவா ளர்களின் விருப்பமாகு மென, ஐ. தே. க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கிறார்.

ரணில் விக்கிரம சிங்க கட்சிக்கு பாரிய வளமாகக் காணப் படுவதாகவும், அவர் தொடர்ந்தும் கட்சியில் இருக்க வேண்டுமெனவும், பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச செயற்குழுக் கூட்டத்திலே ஏற்றுக் கொண்டதாகவும் அத்தநாயக்க கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியானது ரணில் அணி, சஜித் அணி என இரண்டாகப் பிரிந்துள் ளதாகவும் அதில் மூடி மறைப்பதற்கு எதுவும் இல் லையெனவும் அவர் மேலும் கூறினார்.

கட்சி ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அனைவரும் ஏற்றுக் கொள்வதாக கூறிய அவர், உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலின் போது அனை வரும் ஒன்றிணைந்து வெற்றிக்காக பாடு படுவதாகவும் அவர் கூறினார்.

கட்சியில் ஏற்பட்டுள்ள முரண்பா ட்டிற்குத் தீர்வுகாண்பதற்கு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருதாகவும் அவர் மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக