19 ஜனவரி, 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் புளொட் அமைப்பினருக்குமிடையிலான சந்திப்பு





PLOTE.TN தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் புளொட் அமைப்பினருக்குமிடையிலான சந்திப்பொன்று இன்றையதினம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது வவுனியா புகையிரதநிலைய வீதி வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் காரியாலயத்தில் நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம் ஆகியோரும் புளொட் அமைப்பின் சார்பில் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் சிவநேசன் பவன் மற்றும் , வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜீ.ரி.லிங்கநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக