19 ஜனவரி, 2011

உள்ளுராட்சிமன்ற தேர்தல்களில் ஐ.ம.சு.மு எட்டு கட்சிகளுடன் இணைந்து போட்டி: பிரதமர்


எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தல்களில் எட்டு கட்சிகளுடன் ஒன்றிணைந்து தேர்தலை எதிர் கொள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி தட்டமிட்டுள்ளதாக பிரதமர் டீ.எம். ஜயரத்ன தெரிவித்தார்.

இன்று மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோக பூர்வ இல்லத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கண்டி மாவட்ட அமைப்பாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

கண்டி மாவட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு காரியாலயத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்த பின் அவர் அங்கு மேலும் கூறியதாவது, உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 12 ம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறிய அவர், இத் தேர்தல் ஒரு முக்கியமான தேர்தலாகும். இத்தேர்தலின் போது தனி நபருக்கு முக்கியத்துவம். கொடுப்பதை விட அதிக வாக்குகளை பெறக்கூடியவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

வேற்பாளர்களை தெரிவு செய்யும் போது உறவுகளையோ தனிப்பட்ட செல்வாக்குகளையோ கவனத்திள் கொள்ளாது அதிக வாக்குகளை பெற்றுக் கொள்ள தகுதிவுள்ளவர்களையே தெரிவு செய்வது மிக முக்கியமானது.

உள்ளுராட்சி மன்றங்களில் தலைவர்கள், உப தலைவர்கள் போன்றோரை தெரிவு செய்யும் போது கூடுதல் விருப்பு வாக்குகளை பெறுவதை விட திறமையை தகுதி, அர்பணம் ஆகியவற்றையே இதன் போது கவனிக்கப்படும் என்றும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

கண்டி மலபார் வீதியில் திறந்து வைக்கப்பட்ட மேற்படி காரியாலயத்தில் இடம் பெற்ற இக்கூட்டத்தில் கண்டி மாவட்டத்தை சேர்ந்த ஐமசுமு அமைப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக