18 ஜனவரி, 2011

பாக். இராணுவ தளபதி நாளை இலங்கை வருகை






மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வேஷ் கயானி நாளை (19) இலங்கை வரவுள்ளார்.

விசேட விமானம் மூலம் பண்டாரநாயக்க - கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ள பாகிஸ்தான் இராணுவ தளபதியை இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய விமான நிலையத்தில் விரவேற்கவுள்ளார்.

மூன்று நாள் இலங்கையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி நாட்டின் முக்கியஸ்தர்கள், முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 20ம் திகதி கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் செய்யவுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதிக்கு அங்கு விசேட மரியாதை அணிவகுப்பு வழங்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து இரு நாட்டு தளபதிகளுக்கும் இடையிலான சந்திப்பும் இடம்பெறவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக