19 ஜனவரி, 2011

பாகிஸ்தானில் 7.4 ரிச்டர் அளவு நிலநடுக்கம்

பாகிஸ்தான் தென்மேற்குப் பகுதியில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.4 ரிக்டர் அளவுகோலில் பதிவான இந்த நிலநடுக்கம் புதுடெல்லி உள்ளிட்ட இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலும் உணரப்பட்டது.

புதுடெல்லி நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் அதிகாலையில் தங்கள் வீடுகளில் இருந்து வீதிகளுக்கு விரைந்தனர்.

7.4 கிலோமீட்டர் ஆழத்தில் மேலோட்டமாக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ஈரான் மற்றும் ஆப்கன் எல்லைப் பகுதியில் தென்மேற்கு பாகிஸ்தானில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தினால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.

பாகிஸ்தானின் வடக்குப் பகுதியிலும், காஷ்மீரின் சில பகுதிகளிலும் 2008-ம் ஆண்டு அக்டோபரில் 7.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக