19 ஜனவரி, 2011

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதிக்கட்ட நிவாரண திட்டம் 2 . 3 மில்லியன் டொலரில் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை






வடக்கு, கிழக்கு பகுதிகளில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இறுதிக்கட்ட நிவாரணமாக 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள வடக்கு, கிழக்கு கரையோர சமூக அபிவிருத்தி திட்டத்தின் (நெகோர்ட்) கீழ் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

இவற்றில் வட பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாத்திரம் விநியோகிக்கவென 120 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த வடமராட்சி வடக்கு, வடமராட்சி கிழக்கு, கந்தாவலை, கரைதுறைப்பற்று ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த பாதி க்கப்பட்ட மக்களுக்கு இந்த நிதி மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் விநியோகிக்கப்படவுள்ளன. ஆசிய அபிவிருத்தி வங்கி இதற்கான நிதியை வழங்கியுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

லொறிகள்- 02, சிறிய ரக லொறிகள்-07, உழவு இயந்திரங்கள், ட்ரைலர்கள்-06, படகுகள்- 100 மற்றும் படகுகளுக்கு பொருத்தப்படும் வெளிக்கள இயந்திரங்கள்- 100 ஆகியன வட பகுதி மக்களுக்கு விநியோகிப்பதற்காக கொள்வனவு செய் யப்பட்டுள்ளதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் பங்களிப்புடன் வெகு விரைவில் வட பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

மேற்படி நிதியில் 117 மில்லியன் ரூபா கிழக்கு மாகாண மக்களுக்கான நிவாரணத்திற்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக