19 ஜனவரி, 2011

அன்புதான் அன்னை




அன்புதான் அன்னையும் ஆண்டவனுமென்பதில் தவறில்லை... பகுத்தறிவற்ற ஜீவராசிகளிடமும் கூட அன்பும் கருணையும் உண்டென்பதை மனித குலம் புரிந்துகொள்வதற்கு இங்குள்ள படமொன்றே சிறந்த சான்றாகும்.

தாய்ஆடு இறந்துவிட்டதனால் தவித்து நின்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளுக்கு தாய்ப்பாலுக்கு நிகராக பாலூட்டி வருகிறது இங்குள்ள கருணையுள்ள நாயொன்று..... தாயை இழந்த ஆடுகளுக்கு இப்போது அம்மா இதுதான்.

இந்த நாய்க்கும் குட்டிகள் உள்ளன. ஆனால் ஆட்டுக்குட்டிகளுக்கும் சேர்த்து பாலூட்டி வருகிறது. தனது குட்டிகளைப் போலவே ஆட்டுக் குட்டிகளையும் அன்புடன் பேணுகிறது.

ஆட்டுகுட்டிகளை எவராவது தொட்டுவிட்டால் அவர்களை விரட்டி விடுகிறது நாய். பிராணிகள் எமது ஜீவகாருண்யத்துக்குரியன என்பதைப் புரியவைக்கும் வியப்பைக் காண நாம் வேறெந்த நாட்டுக்கும் செல்லத் தேவையில்லை. பதுளையில் உள்ள எல். ரவிச்சந்திரன் என்பவரின் வீட்டில் இந்த அற்புத காட்சியைக் காண முடியும். நன்றி தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக