7 டிசம்பர், 2010

விக்ரமபாகு கருணாரத்ன மீது விமான நிலையத்தில் தாக்குதல்

புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன இன்று பிற்பகல் விமான நிலையத்தில் பொதுமக்கள் சிலரின் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தகவலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எமது இணையத்தளத்துக்கு உறுதிப்படுத்தினார்.

கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் வருகைக்காக காத்திருந்த சுமார் 40 பேர் இவர் மீது தாக்குதல் நடத்தியதுடன் அவரது ஆதரவாளர்களையும் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து அவர் பாதுகாப்பாக வாகனத்தில் அங்கிருந்து சென்றுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக