7 டிசம்பர், 2010

யாழ் மற்றும் கிளிநொச்சியில் 601 சட்டவிரோத மின்பாவனையாளர்கள்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் 601 சட்டவிரோத மின்பாவனையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.

மின்சாரசபை கடந்த நவம்பர் மாதம் மேற்கொண்ட திடீர்சோதனை நடவடிக்கையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத மின்பாவனையாளர்களிடமிருந்து பெறப்பட்ட தண்டப்பணம் மூலம் 12.5 மில்லியன் ரூபாய் மின்சாரசபைக்கு கிடைத்துள்ளது.

இதனால் மின்சாரசபைக்கு நாளொன்றுக்கு 6 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுகிறது. இவ்வாறான மின் பாவனையாளர்களிடமிருந்து அறவிடும் தண்டப்பணத் தொகையை மேலும் அதிகரிக்குமாறு அமைச்சு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் இதுகுறித்த தகவல்களை திடீர்சோதனைப் பிரிவின், 1987 என்ற இலக்கத்துக்கு அறியத்தருமாறு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக