7 டிசம்பர், 2010

கரு ஜயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஜனவரியில் விவாதிக்க அரசாங்கம் தீர்மானம்



நாட்டைக் காட்டிக் கொடுக்கும் வகையில் தேசத்துரோக கருத்துத் தெரிவித்த ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரிய எம்.பிக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

விரை வில் இந்த பிரேரணை சபா நாயகரிடம் கையளிக்கப்பட்டு ஜனவரி மாதத்தில் விவாதிக்க எடுக்கப்பட உள்ளதாக ஐ.ம.சு. முன்னணி செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த் நேற்று தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று பாராளுமன்ற கட்டிடத்தின் குழு அறை ஒன்றில் நடைபெற்றது. யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கையை விசாரணைக்குட் படுத்த வேண்டும் என கருஜயசூரிய எம்.பி. கூறியுள்ள கருத்து தொடர் பாக கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த இந்த ஊடக மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இங்கு கருத்துத் தெரிவித்த அமை ச்சர் விமல் வீரவன்ச, கரு ஜயசூரிய வுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டு வந்து கடும் நடவடிக்கை எடுக்க உள்ளோம். ஜனாதிபதியையும் படை வீரர்களையும் சர்வதேச யுத்த நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண் டனை வழங்கவே ஐ.தே.க. இவ் வாறு குற்றச்சாட்டு தெரிவித்துள் ளது.

தேசிய உடையணிந்து தேசத்து ரோக செயலில் ஈடுபட்டு வரும் கரு ஜயசூரியவின் முக மூடியை நாட்டு க்கு வெளிப் படுத்துவோம் என்றார்.

மேற்படி பிரேரணை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டு விவாதத்திற்கு காலம் ஒதுக்க ப்படும் என அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக