7 டிசம்பர், 2010

கண்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின்சாரசபை ஊழியர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்


கண்டி மின்சாரசபை கட்டிடத்தின் கூரை மீதேறிப் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் நீர் பீச்சுதல்; என்பன மேற்கொள்ளப் பட்டன. இதனால் பதட்ட நிலை ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை மின்சார சபையில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை உடன் நிரந்தர சேவையில் இணைக்கும் படி கோரிக்கை விடுத்து இலங்கை மின்சார சபையின் கண்டி பிரதான காரியாலய கூரை மீது ஊழியர்கள் மேற்கொண்டுவந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு இரவு 7.30 மணி அளவில் பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மற்றும் நீர் விசுறுதல்; என்பன மேற்கொள்ளப் பட்டதனால் பதற்ற நிலை ஏற்பட்டது.

இலங்கை மின்சார சபையின் மத்திய மாகாணம் முழுதும் ஒப்பந்த அடிப்படையிலும் தற்காலிக அடிப்படையிலும் சேவை செய்யும் ஊழியர்கள் சுமார் 400 பேர் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இரவு 7.00 மணி அளவில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் போராட்டத்தை கை விடுமாறு வேண்டிய போதும் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளாததன் காரணத்தால் கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக