30 ஜூன், 2010

2010 வரவு செலவு திட்டம் மக்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கு கூடுதல் நிதி

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்ப ட்டுள்ள 2010ம் ஆண்டுக்கான (நடப் பாண்டு) வரவு -செலவுத் திட்டத் தில் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களுக்கு பெருந்தொகை நிதி யொதுக்கீடுகள் செய்யப்பட்டுள் ளன.

இலவச பாடப் புத்தகங்கள், இலவச போஷாக்குணவு, சீரு டைகள் (பாடசாலை) போக்கு வரத்து மானியங்களுக்கென பெருந் தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி திட்டம், இளைப்பாறல் நன்மைகள், கர்ப்பிணித் தாய் மார்கள், பாலூட்டும் தாய் மார்கள் நன்மை பயக்கும் வகையிலும் பெருமளவு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

சுமார் 2 மில்லியன் விவசாயிகள் நன்மை பெறும் வகையில் உர மானியங்கள், மானியக் கடன்கள் உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு ஆகிய செலவி னங்களுக்கென 35,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இலவச சுகாதார சேவையினை தொடரும் வகையிலும் நிதி ஒதுக் கப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டுக்கான (நடப்பாண்டு) வரவு செலவுத் திட் டம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பதில் நிதி, திட்டமிடல் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம இதனைச் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார். இதன் போது, எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், தொடர் பாக அவர் தெரிவித்த விடயங் களை இங்கே ஒரே பார் வையில் தருகிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக