30 ஜூன், 2010

அரச ஊழியர் சம்பள அதிகரிப்பு 2011 பட்ஜட்டில் வெளியாகும்’

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவிருக்கும் 2011ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வெளியாகும் என பதில் நிதியமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு- செலவுத் திட்ட யோச னைகளை சபையில் சமர்ப்பித்து உரையாற்றிக் கொண்டிருக்கையில் எதிரணி எம்.பிக்கள் எழுப்பிய கேள் விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப் பிட்டார். அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த காலங்களைப் போன்று தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி 2011ம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான புதிய சம்பள உயர்வுக் கட்டமைப்பு அறிவிக்கப்படும்.

அதேநேரம் தற்போது எதுவிதமான ஓய்வூதிய திட்டத்திற்கும் உட்படாத அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கென ஓய்வூதிய நிதியமொன்றும் உருவாக்கப்படும். இது தொடர்பான வாக்குறுதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக