30 ஜூன், 2010

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பாதுகாப்புப் பிரிவு தலைவருக்கு சிறைத்தண்டனை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு பிரிவு தலைவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் கருணாரத்னவுக்கு கண்டி மேல் நீதிமன்றம் நான்கு வருட சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

கண்டி மேல் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சுரேஷன் இத்தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

2001 ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி ஹங்குராங்கெத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குணரத்தன பண்டாரவை, பொரமதுல்ல மகா வித்தியாலய மைதானத்தில் வைத்து அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக