30 ஜூன், 2010

அமெரிக்காவில் இந்திய விஞ்ஞானி அடித்துக் கொலை


அமெரிக்காவில் சீமென்ஸ் நிறுவனத்தில் விஞ்ஞானியாக இருந்தவர் திவ்யந்து சின்கா (49). இந்தியாவைச் சேர்ந்தவர்.

இவர் நியூஜெர்சி நகரில் உள்ள ஓல்டு பிரிஜ் என்ற இடத்தில் வசித்து வந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை அவர் வீட்டின் அருகே நடந்து சென்றார். அவருடைய 2 மகன்களும் உடன் சென்றனர்.

அப்போது அங்கு 3 வாலிபர்கள் காரில் வந்தனர். அவர்கள் திவ்யந்து சின்கா மற்றும் 2 மகன்களையும் அடித்து உதைத்தனர். அதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி திவ்யந்து சின்கா உயிர் இழந்தார்.

இது தொடர்பாக போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். எதற்காக அவர்கள் தாக்கினார்கள் என்ற விவரம் வெளியிடப்பட வில்லை. இனவெறி காரணமாக தாக்குதல் நடந்ததா? என்றும் தெரியவில்லை.

அமெரிக்க போலீசார் இதுபற்றி கூறும்போது, விசாரணை முற்றிலும் முடிந்த பிறகே தகவல் சொல்ல முடியும் என்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக