30 ஜூன், 2010

யாழ். அரசாங்க அதிபராக இமெல்டா நாளை பதவியேற்பு வடக்கின் நிர்வாக சேவையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் யாழ். புதிய அரசாங்க அதிபராக திருமதி இமெல்டா சுகுமார் நாளை பதவியேற்கவுள்ளார்.

யாழ். அரச அதிபராக இருந்த கணேஷ் ஓய்வு பெறவிருப்பதையடுத்தே, திருமதி இமெல்டா பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, முல்லைதீவு புதிய அரசாங்க அதிபராக வேதநாயகம் பதவியேற்கவுள்ளதாக அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபராக இமெல்டா சுகுமார் கடமையாற்றியமை குறிப்பிடத்தகக்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக