11 மே, 2010

கொழும்பில் 79 பிச்சைக்காரர்கள் கைது

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள பிச்சைக்காரர்கள் 79 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பிச்சைக்காரர்கள் போன்று நடமாடுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ரயில் மற்றும் பஸ்களில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் வீதிகளில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகமாயுள்ளதால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மற்றுமொரு தகவல் தெரிவித்தது. இவர்கள் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்துக்குச் சொந்தமான கட்டடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக