11 மே, 2010

ஈரான் ஏவுகணை சோதனை






ஈரான் நேற்று முதன் முதலாக கடலுக்குள் குறைந்த தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை சோதனை நடத்தியது. அதன் பெயர் பாஜா-5. இது சுமார் 75 கி.மீ. தூரம் சென்று இலக்கை தாக்கக்கூடியது.

இதற்கு முன்பு போரின்போது இது பயன்படுத்தப்படவில்லை. தற்போதுதான் முதன் முதலாக வளைகுடா கடலில் தண்ணீருக்குள் ஏவி சோதித்து பார்க்கப்பட்டது. இந்த தகவலை ராணுவ துணை தலைமை அதிகாரி கியோமர்ஸ் ஹைதரி தெரிவித்தார்.

ஏற்கனவே இந்த ஏவு கணை கடலுக்கு வெளியே ஏவி சோதனை நடத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக