11 மே, 2010

தமிழ்ச்செல்வன் குடும்பம் இந்தியா செல்ல அனுமதி :



விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் இந்தியாவில் அரசியல் புகலிடம் கோரவிருப்பதாக பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கைகளின்போது கைதுசெய்யப்பட்ட தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் தற்போது இராணுவத்தினரின் பாதுகாப்பில் தங்க வைக்கட்டிருக்கின்றனர்.

தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினரை இராணுவத்தினர் நன்றாகப் பராமரித்து வருவதாகவும் பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் குறிப்பிட்டார்.

தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் இந்தியாவுக்குச் செல்வதற்கான அனுமதி கோருவதாகவும், அவர்களது கோரிக்கை கவனத்திற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் போராளிகள் அல்லர் என்பதுடன், அவர்கள் பொதுமக்கள் எனவும் பிரதி மீள்குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சுட்டிக்காட்டினார்.

அவர்களின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு தான் கொண்டுசெல்லவிருப்பதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக