11 மே, 2010

வாடகை தாயின் இரட்டையருக்கு அனுமதி மறுப்பு



இஸ்ரேலை சேர்ந்த ஓரினச்சேர்க்கை ஆண், இந்திய வாடகைத் தாய் மூலம் பெற்ற இரட்டைக் குழந்தைகள் இஸ்ரேல் வர அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
டான் கோல்ட்பெர்க் என்பவர், இஸ்ரேலில் தனியாக வசிக்கிறார். அவருக்கு குழந்தை ஆசை வந்தது. மும்பையை சேர்ந்த வாடகைத் தாய் மூலம் செயற்கை கருவூட்டல் முறையில் சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவற்றுடன் நாடு திரும்ப முயன்றார் டான்.
ஆனால், குழந்தைகளுக்கு தந்தை என்று சோதனையில் டான் நிரூபித்த பிறகே அனுமதி என்று இஸ்ரேல் குடும்ப நீதிமன்றம் கூறி விட்டது. எனவே, கடந்த 2 மாதங்களாக மும்பை ஓட்டலில் கைக்குழந்தைகளுடன் டான் தங்கியுள்ளார். தாய்நாட்டின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக