11 மே, 2010

பொன்சேகா நாளை நீதிமன்றில் ஆஜர்



ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவ தளபதியும் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத் பொன்சேகா நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்படவிருக்கின்றார்.

இதனையொட்டி புதுக்கடை மஜிட்ரேட் நீதிமன்ற கட்டிடத்தொகுதி இராணுவத்தினரால் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.முல்லைத்தீவில் இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியை ஏந்திவந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டதாக அவர் கூறியது தொடர்பில் விசாரிப்பதற்கே பொன்சேகாவை நீதிமன்றத்திற்கு அழைத்துவருவதற்கு இரகசிய பொலிஸார் நீதிமன்றிடம் கோரியிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக