8 ஏப்ரல், 2010

காலியில் துப்பாக்கிப் பிரயோகம் : தே.வ.க.மத்திய நிலையம்

காலி தங்கல்ல பிரதேசத்தில் இரண்டு துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையத்தின் இணைப்பாளர் ஹஜ்மீர் தெரிவித்தார்.

எனினும் துப்பாக்கி பிரயோகம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உட்பூசல் காரணமாகவே இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இச்சம்பவங்களின் போது எவரும் காயங்களுக்கு உள்ளாகவில்லை என அந்நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நாடளாவிய ரீதியில் இதுவரை 67 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக