8 ஏப்ரல், 2010

வவு. வாக்காளர்கள் உரிய நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படவில்லை : சிஎம்ஈவி தெரிவிப்பு

வவுனியா நலன்புரி கிராமங்களிலுள்ள வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர்களுக்கு உரிய வாக்கெடுப்பு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படாமல் வெறொரு வாக்கெடுப்பு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையம் தெரிவித்தது.

ஒட்டுசுட்டான், நெடுங்குளம் ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய சுமார் 100 இடம்பெயர்ந்த வாக்காளர்கள் வவுனியா தமிழ் வித்தியாலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் மத்திய நிலையத்தின் இணைப்பாளர். தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக