8 ஏப்ரல், 2010

சனத் ஜயசூரிய நேற்று தபால் மூலம் வாக்களிப்பு


மாத்தறை மாவட்ட ஐக் கிய மக்கள் சுதந்திர முன் னணி வேட்பாளரும் பிரபல கிரிக்கெட் வீரருமான சனத் ஜயசூரிய நேற்று காலை (7) தபால் மூலம் வாக்களித் ததாக மாத்தறை உதவித் தேர்தல் ஆணையாளர் சுனேத் லோசன தெரி வித்தார்.

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். 20க்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு செல்வதற்காகவே இவருக்கு தபால் மூலம் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் சட்ட த்தின் 20 (சீ) பிரிவின் பிர காரம் அவருக்கு முன்கூட்டி வாக்களிக்க தேர்தல் ஆணை யாளரின் விசேட அனுமதி வழங்கப்பட்டதாக தேர்தல் திணைக்களம் கூறியது, காலை 11.30 மணியளவில் மாத்தறை உதவித் தேர்தல் காரியாலயத்தில் சனத் வாக்களித்தார்.

அவர் நேற்று இந்தியா பயண மாக ஏற்படாகியிருந்தது, ஐ.பி.எல். போட்டிகளில அவர் மும்பை இன்டியன்ஸ் அணிக்காக விளை யாடி வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக