8 ஏப்ரல், 2010

சுமுகமான நிலையில் மன்னாரில் வாக்களிப்பு

_

வன்னி தேர்தல் தொகுதியின் மன்னார் மாவட்டத்தில் தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் சுமூகமான முறையில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பகல் 1.00 வரை 27 வீதமானோரே வாக்களிப்பில் ஈடுபட்டிருந்ததாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்திருக்கின்றார்.

இம்மாவட்டத்தில் வாக்களிப்பதற்கு 2,66,975 பேர் தகுதி பெற்றுள்ளனர். 209 தேர்தல் தொகுதிகளில் 68 தேர்தல் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பபட்டுள்ளன.

அதேவேளை, மன்னார் மாவட்ட தேர்தல் தொகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக