17 டிசம்பர், 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் கொழும்பில் சந்தித்துப் பேச்சு-

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்றுமாலை 7.00மணியளவில் கொழும்பிலுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில் சந்திப்பினை நடத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரங்கத்திற்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இருதரப்பு அங்கத்துவம் கொண்ட குழுவை நியமிப்பதென எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய அரங்கம் சார்பிலான குழுவுக்கு இன்று மூவர் தெரிவுசெய்யப்பட்டனர். இதன்படி திரு.வீஆனந்தசங்கரி, திரு.த.சித்தார்த்தன், திரு.அ.இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். கடந்த 11.12.2010அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்திற்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு, தமிழ்; மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் என்பன தொடர்பாக ஒருமித்த குரலில் யோசனைகளை முன்வைப்பதற்காக ஒரு வரைபை யாப்பதற்கு இருதரப்பின் அங்கத்துவமும் கொண்ட ஒரு குழுவை அமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது. இதற்கமையவே இன்று அரங்கம் கூடி மேற்படி மூவரையும் தெரிவுசெய்ததுடன், மேலும் இருவரை குழுவில் இணைப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்தாலோசிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக