17 டிசம்பர், 2010

மீள் குடியேற்ற அமைச்சர் பிரதி அமைச்சர், வடக்கு விஜயம்


மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்தின வீரக்கோன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் அமைச்சின் முக்கிய அதிகாரிகள் வடக்கே ஒரு வார கால விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பிக்கும் இந்த விஜயம் அடுத்த வெள்ளிக்கிழமை வரை இடம்பெறுமென மீள்குடியேற்ற அமைச்சின் ஊடகப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறினார். 18ம் திகதி முதல் 24ம் திகதி வரையும் இவர்கள் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தமது விஜயத்தை மேற்கொள்வார்கள்.

குறித்த மாவட்ட அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்களுடன் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடல், அத்துடன் இந்த விஜயத்தின்போது மீள்குடி யேற்றப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து ஆராய்வார் களென தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக