17 டிசம்பர், 2010

மன்னாரில் மீன்பிடி வலைக்குள் சிக்கிய இராட்சத கடற்பன்றிகள்





மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியின் வங்காலைப்பாடு கடற்பகுதியில் கடற்தொழிலுக்குச்சென்ற மீனவர் ஒருவரின் வலைத்தொகுதியில் இராட்சத கடற்பன்றிகள் சிக்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

கடற்பன்றிகளைக் கரைக்குக் கொண்டுவந்துள்ளதாக கடற்படையினர் மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் அவ்விடத்துக்கு விரைந்துள்ளனர்.

பன்றிகளை கரைக்குக் கொண்டு வந்த மீனவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட பன்றிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இவை மன்னார் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவற்றைப் பார்வையிட வருகை தந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக