17 டிசம்பர், 2010

தினமின’ மேலும் 100 ஆண்டுகள் பயணத்துக்கு தயாராகிவருகிறது


நூறு ஆண்டுகள் இலங்கை வாசகர்களுக்கு பங்களிப்பை வழங்கியுள்ள தினமின மேலும் நூறு ஆண்டுகளுக்கான பய ணத்துக்கு தயாராகி வருகிறது. இலங்கையர்கள் என்ற ரீதியில் இது நாங்கள் அனைவரும் பெருமை கொள்ளக்கூடிய மகிழ்ச்சி தரும் செய்தி யாகும்.

தினமினவின் இந்த செயற்பாட்டை அளப்பதற்கு கடந்த நூறு வருடங்களில் முகங் கொடுக்க நேர்ந்த பல்வேறு சவால்களை வெற்றிகொண்டு தைரியத்துடன் முன்னேறிச் செல்லும் பாதையை உற்று நோக்குவதே சரியானதாகும் என்று தினமின பத்திரிகையின் நூற்றாண்டை முன்னிட்டு ஊடக மற்றும் தகவல்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ. பீ. கணேகல விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

எமது நாடு அந்நிய ஆட் சிக்குட்பட்டிருந்த காலத்தில் ஆரம்பிக் கப்பட்ட தினமின தேசிய பத்திரிகையாக அபி மானத்துடன் எழுந்து நின்றது. நாட்டின் சுயாதீனத்துவம் மற்றும் தேசிய தனித்துவம் ஆகிய வற்றையே தினமின எப்போதும் சார்ந்து நின்றது.

அந்நியத்துவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தேசிய சக்திகளுக்கு துணை நின்றதுடன், தேசிய உரிமை மற்றும் கலாசார பெருமையையும் அது பாதுகாத்து வந்தது. கண்ணியம் மிகுந்த பத்திரிகை துறையில் முன்னிலை வகித்ததுடன் உயர் தரத்துடன் கூடிய பத்திரிகை துறைக்காக சரியான மொழிப் பிரயோகம் அத்தியாவசியமானது என்பதை சுட்டிக் காட்டியது. இவ்வாறான தேசாபிமான நடவடிக்கைகளுக்கு வழி வகுத்த தினமின ஆரம்பகர்த்தா டி. ஆர். விஜேவர்தனவுக்கு

இனத்தின் நன்றிகள் உரித்தாகட்டும். நூறு ஆண்டுகள் சென்றாலும் தினமின வுக்கே உரித்தான தனித்துவம், மனதுக்கு பிடித்தமான ஊடக முறைமை இன்னும் தொடரும் வகையில் செயற்பட்ட பின் னாள் முகாமைத்துவத்தின் சேவையை நாம் மதிக்கின்றோம்.

தசாப்த காலங்களாக இந்நாட்டில் இடம்பெற்ற பாரிய அரசி யல் சர்ச்சைகள், பொருளாதார பிரச்சினை மற்றும் உண்மையான தேசிய நீரோட் டத்துக்காக இடம்பெற்ற சமூக நிகழ்வுகளின் வேதனையை ஏற்றுக்கொண்டு தொடர்ந்தும் சிங்கள வாசகர்களுக்காக இன்றுவரை தினமின முன்னேற்றகரமான ஊடக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சுதந்திரத்தின் பின்னர் அதிகாரத்துக்கு வந்த அனைத்து அரசாங்கங்களையும் தினமின ஆதரித்து வந்துள்ளது. இன்றும் அதுபோலவே செயற்படுகிறது. அதிகாரத்துக்கு வரும் அரசாங்கம் மக்களுக்காக ஆற்றும் சேவை தொடர்பாக மக்களுக்கு புரிய வைப் பதற்காக தினமின அவ்வாறு செயற்பட வேண்டியுள்ளது.

நவீன தொழில்நுட்பத்தின் மகத்துவத்துடன் நாட்டில் இன்று வெளிவரும் பல்வேறு பத்திரிகைகளுடன் போட்டியிட்டு எழுந்து நிற்கும் வகையில் தினமின எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டி யவை என்று அந்த வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக