17 டிசம்பர், 2010

தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடையில்லை



தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடை யில்லை. அரசியல மைப்பில் குறிப்பிடப் பட்டுள்ளவாறு தேசிய கீதம் இசைக்க முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்க வேண் டுமென தவறான அபிப்பிராயம் பரப் பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடி வுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மா நாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, தேசிய கீதம் இசைப்பது தொடர்பில் அரசிய லமைப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் மெட்டையோ உச்சரிப் பையோ மாற்றாது பாட முடியும். அதற்குரிய கெளரவம் வழங்கப் பட வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் சிங் களத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று கூற முடியாது. அங்கு தமிழில் தேசிய கீதம் இசைக்க முடியும். ஐ.தே.க. ஆட்சியில் தேசிய கீதத்தின் மெட்டை மாற்ற முயற்சி நடந்தது. தேசிய கீதத்தை இசைத்து நடனம் ஆட இடமளிக்க முடியாது. சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்க வேண்டுமென அமைச்சர் வீரவன்ச கூறி யிருப்பது அவரது தனிப்பட்ட கருத்தாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக