17 டிசம்பர், 2010

சகல இலத்திரனியல் ஊடகங்களும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றம் 6 ஆண்டு திட்டத்துக்கு அங்கீகாரம்



சகல அரச மற்றும் தனியார் இலத்திரனியல் ஊடகங்களுக்கும் நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப முறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த புதிய திட்டம் 2011 இல் ஆரம்பிக்கப்பட்டு 2017ல் பூர்த்தி செய்யப்படும்.

தற்பொழுது சகல இலத்திரனியல் ஊடகங்களும் ‘அனலொக்’ தொழில் நுட்பத்தையே பயன்படுத்துகின்றன. டிஜிட்டல் தொழில்நுட்பம் கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு 2017ல் அனலொக் முறை முற்றாக நீக்கப்படும்.

இதற்கான செலவை அரசாங்கம் ஏற்க உள்ளதோடு, பல அயல் நாடுகளில் ஏற்கெனவே டிஜிட்டல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனலொக் முறையில் இருந்து டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாறுவதற்கு 2015 வரை தனியார் துறைக்கு அவகாசம் வழங்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக