2 டிசம்பர், 2010

ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும்போது இத்தாலியில் இருந்தேன்: ஜயலத் எம்.பி

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம் செய்யும்போது இத்தாலியில் இருந்ததாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஜயலத் எம்.பி கலந்துகொண்டதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன குற்றம் சுமத்தினார்.

எனினும் அந்தக் குற்றச்சாட்டில் எதுவித உண்மையும் இல்லை என்றும் கடவுச்சீட்டை ஆதாரமாகக் காட்ட தயாரென்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக