2 டிசம்பர், 2010

இவ்வாண்டு இலங்கை சுற்றுலாத்துறையில் 43 வீத வளர்ச்சி

இலங்கையில் இவ்வருடம் சுற்றுலாத் துறை 43 சதவீத வளர்ச்சியைக் காட்டுவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.

இலங்கைக்கு கடந்த 10 மாதங்களில் சுமார் ஐந்து இலட்சம் பேர் வருகை தந்துள்ளதாகவும் எதிர்வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேற்கு ஐரேப்பாவில் இருந்து இரண்டு இலட்சம் பேரும், தென்னாபிரிக்காவில் இருந்து ஒரு இலட்சத்து 30ஆயிரம் பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 25 ஆயிரம் பேரும், தென்கிழக்காபிரிக்காவில் இருந்து 52 ஆயிரம் பேரும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து 30 ஆயிரம் பேரும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து 26 ஆயிரம் பேரும் வட ஆபிரிக்காவில் இருந்து 32 ஆயிரம் பேரும் வருகைதந்துள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக