2 டிசம்பர், 2010

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஉரை ரத்து






இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆக்ஸ்போர்டில் வியாழக்கிழமை ஆற்ற இருந்த சிறப்பு உரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்ட் யூனியன் அமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு தனது இணையத் தளத்தில் ஒரு அறிவித்தலை வெளியிட்டிருந்தது.

இந்த உரையை ஆற்றுவதற்காக இலங்கை ஜனாதிபதி பிரிட்டனுக்கு வந்ததை பிரிட்டனில் வாழும் தமிழர்கள் வன்மையாக கண்டித்து விமான நிலையத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியிருந்தார்கள்.

நாளை அவர் உரையாற்றவிருந்த மன்றத்தின் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ் அமைப்புக்கள் சிலவற்றால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே அந்த உரை நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்துச் செய்யப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காகவே அந்த உரை ரத்துச் செய்யப்பட்டதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இந்த ரத்து காரண்மாக தாம் வருத்தமடைவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

நடக்கக்கூடிய ஆர்ப்பாட்டங்களின் அளவு பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த உரை பாதுகாப்பாக நடக்கும் என்று தாம் கருதவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக