2 டிசம்பர், 2010

நிதி, கணக்கீட்டுத் துறையில் இலங்கை உலகில் 16வது இடம் 3 ஆண்டுகளுக்கு முன்னர் 25வது இடத்தில்

உலகின் முன்னணி தொழில் நிறுவனங் களுக்கு வெளி வர்த்தக சேவைகளை வழங்குவது தொடர்பான கருத்துக்கணிப் பினை மேற்கொள்ளும் அமெரிக்காவின் ஏ. ரீ. கியனி குலோபல்சேர்விசஸ் (அ. ப. ஓடீஹஙுடூடீஞி) கம்பனியின் பூகோள சேவைகள் குறிகாட்டியின் பிரகாரம் நிதி மற்றும் கணக்கீட்டுப் பிரிவிலே இலங் கைக்கு 16ஆவது இடம் கிடைக்கப் பெற்றுள்ளது. 2007ஆம் ஆண்டிலே இலங்கை 25ஆவது இடத்திலேயே காணப்பட்டது. அதிலிருந்து மிகவும் குறுகிய காலத்தினுள் 13 இடங்களைத் தாண்டி இலங்கை பெற்றுள்ள முன்னேற் றத்தைப் பாராட்டுதல் வேண்டுமென ஆசியா மற்றும் பசுபிக் வலயத்திற்கான ஐ.எப்.எஸ். நிறுவனத்தின் ஆணைத் தலைவர் ஜயந்த டி சில்வா குறிப்பிட்டார்.

உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் ஆலோசனை நிறுவனம் ஒன்றான ஏ. ரீ. கியனி (அ. ப. ஓடீஹஙுடூடீஞி) கம்பனியின் 2007-2009 இற்கான பூகோலா சேவைகள் குறிகாட்டி அறிக்கையின் மூலம் இது வெளியிடப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டிலே யுத்தம் முடிவடை வதற்கு முன்னர் இந்நாட்டில் காணப்பட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த குறிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இந்நாட்டின் சூழ்நிலை முழுமையாக மாற்றமடைந்து உள்ளமையால் எமது நாடானது இதைவிடவும் முன்னிலை வகிக்குமென நம்பப்படுவதாக சில்வா மேலும் குறிப்பிட்டார்.

உலகிலே துரிதமாக முன்னேற்றமடையும் (ஆஊஞ) சேவைகள் காரணமாக பாரிய அளவு நிதி இந்நாட்டிற்குக் கிடைக்கப்பெற்று ள்ளது. கணனித்துறையில் தொழில்புரியும் இளைஞர்களுக்கு அதிக வருமானத்தைப் மாதாந்தம் பெற்றுக்கொள்ள இத்துறை துணைபுரிகின்றது. இதனை இந்நாட்டிற்கு அந்நிய செலாவணியை கொண்டுவரும் முக்கியமான துறையொன்றாக விரைவில் மாற்றியமைக்க முடியுமெனவும் சில்வா மேலும் சுட்டிக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக