2 டிசம்பர், 2010

சமுர்த்தி அபிவிருத்திக்கான நிதி ரூ. 2000 மில்லியனாக அதிகரிப்பு உதவி பெறுவோர் 15 இலட்சம்; மேம்பாட்டுக்கும் திட்டங்கள்

சமுர்த்தி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கடந்த காலங்களில் 30 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டு வந்தபோதும் இம்முறை அத்தொகை 2000 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சமுர்த்தி உதவி பெறுவோர் எண்ணிக்கை தற்போது 15 இலட்சமாக உள்ளதுடன் 40,000 மில்லியன் ரூபா நிதி சமுர்த்தி உதவியாக வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தொடர்ந்து சமுர்த்தி உதவி பெறுபவர்க ளாக மக்களை வைத்திருக்காமல் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி சுயமாக அவர்களை வாழச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கான செயற்திட்டங்களையே பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மேற்கொண்டு வருகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ரவி கருணாநாயக்க எம்.பி. தமது கேள்வியின் போது சமுர்த்தி உதவி பெறுவோர் மற்றும் அவர்களுக்கான செயற்றிட்டங்கள் சம்பந்தமாகத் தெளிவு படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக