25 டிசம்பர், 2010

கிழக்கு மாகாணத்தில் கடும் மழை – பெருமளவானோர் பாதிப்பு






கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் அடைமழையினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் இரண்டு பிரதேச செயலாளர் பிரிவுகளில் 500 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து நான்கு நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சந்தரம் அருமைநாயகம் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே கூடுதலான வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிகமாக பாடசாலைகளிலும் ஏனைய பொது இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக