25 டிசம்பர், 2010

அரச தீர்மானத்துக்கு எதிர்ப்பு- நாடாளுமன்ற மாடியிலிருந்து குடும்பஸ்தர் தற்கொலை முயற்சி(காணொளி இணைப்பு)




வலது குறைந்த குழந்தைகளுக்கான கொடுப்பனவை இரத்துச் செய்தல் தொடர்பில் ருமேனியாவின் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டுப் பிரஜை ஒருவர் நாடாளுமன்றத்தின் மேல் மாடியிலிருந்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இச்சம்பவம் ருமேனிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பிரதமர் எமில் பொக் உரையாற்ற ஆரம்பித்துள்ளார். அதன்போது "பொக்இ நீங்கள் எங்களுடைய குழந்தைகளின் உரிமைகளைப் பரித்துவிட்டீர்கள்" எனக் கூறியவாறு மேலிருந்து கீழே பாய்ந்துள்ளார். அவருடைய மேற்சட்டையில் ' நீங்கள் எங்களது எதிர்காலத்தைக் கொன்றுவிட்டீர்கள்" என எழுதப்பட்டிருந்தது.

இதனை நேரடியாகப் பார்த்தோரும் தொலைக்காட்சிகளினூடாகப் பார்வையிட்டோரும் கண்ணீர் வடித்துள்ளனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக