22 டிசம்பர், 2010

இலங்கை - இந்திய கப்பல் சேவையுடன் இணைந்ததாக தூத்துக்குடியிலிருந்து பிரதான நகரங்களுக்கு ரயில் சேவை

இலங்கை - இந்திய அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கைஇலங்கை - இந்திய கப்பல் சேவையுடன் இணைந்ததாகத் தொடர் ரயில் சேவைகளையும் நடத்துவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தொடர் ரயில் சேவைகளை நடத்துவது பற்றி இலங்கை - இந்திய அரசுகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா தெரிவித்துள்ளார்.

கோபியோ (வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினருக்கான அமைப்பு) பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கமைய இந்திய உயர் ஸ்தானிகர் இதற்கான உறுதிமொழியை வழங்கியதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தினகரனுக்கு தெரிவித்தார்.

கொழும்புக்கும் தூத்துக்குடிக்குமான கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியிலிருந்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கான ரயில் சேவையையும் இணைத்து நடத்த வேண்டுமென்றும் அங்கு ரயில் பயணத்தை மேற்கொள்வதற்கு இலங்கையிலேயே ஆசனங்களைப் பதிவுசெய்து பயணச் சீட்டைப் பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட வேண்டுமென்றும் இந்திய உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக கண்டியிலிருந்து கொழும்பு வந்து கப்பல் மூலம் தூத்துக்குடி வழியாக சென்னை செல்ல விரும்பும் ஒருவர், சென்னை வரையிலான கப்பல், ரயில் பயணங்களுக்கான பயணச் சீட்டைக் கண்டியிலேயே பெற்றுக் கொள்ள வசதிசெய்ய வேண்டு மெனக் கோரிக்கை விடுக்கப்பட்டு ள்ளது.

இதற்கமைய நடவடிக்கை எடுப் பதாக இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்ததாக பிரபா கணேசன் எம்.பி. கூறினார்.

இந்திய உயர்ஸ்தானிகருடன் நடைபெற்ற ‘கோபியோ’ சந்திப் பில் பிரதியமைச்சர் முத்து சிவ லிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் கள் பிரபா கணேசன், வீ. இராதா கிருஷ்ணன், முன்னாள் பிரதி அமை ச்சர் பெ. இராதாகிருஷ்ணன், முன் னாள் இராஜாங்க அமைச்சர் பீ. பீ. தேவராஜ், குமார் நடேசன், திருமதி சாந்தினி சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக