22 டிசம்பர், 2010

வடமத்திய மாகாணத்தில் உள்ளோர் மழைநீரை அருந்துவது சிறந்தது – ஆய்வில் தகவல்

சிறுநீரக வியாதியில் இருந்து தம்மைக்காத்துக் கொள்ள வடமத்திய மாகாணத்திலுள்ளோர் மழை நீரை அருந்துவது சிறந்தது எனத் திடுக்கிடும் தகவலை பேராதனைப் பல்கலைக்கழக வைத்திய குழுவொன்று கூறுகிறது.

பேராதனைப் பல்கலைக்கழக வைத்தியத்துறையைச் சேர்ந்த குழுவினர் மேற்கொண்ட மற்றுமொரு ஆய்வின் மூலம் சிறுநீரக வியாதியை ஏற்படுத்துகின்ற பச்சை அல்கா எனும் தாவரத்தின் தாக்கம் வடமத்திய மாகாணத்தில் உள்ள கிணற்று நீரிலும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி தம்மிகா மெனிக்கே திசாநாயக்க தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வின் படி வடமத்திய மாகாணத்திலுள்ள நீர் நிலைகளில் வளர்கின்ற நீலநிற பச்சை அல்காக்கள் (புலூகிறீன் அல்கா) உற்பத்தி செய்யும் ஒருவகை நச்சுப் பொருளே சிறு நீரகப் பாதிப் பிற்குக் காரணம் என ஏற்கனவே தெரிவித்தனர்.

இதே தாவரங்கள் கிணற்று நீரிலும் ஊடுறுவியுள்ளதாக அந்த ஆய்வில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக