22 டிசம்பர், 2010

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த ஐ.நா நிபுணர் குழுவிடம் போதிய சாட்சியங்கள்: சம்பிக்க ரணவக்க




போர் குற்றங்களின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கையை நிறுத்துவதற்கு தேவையான அனைத்து சாட்சியங்களையும் ஐ.நா.வின் நிபுணர் குழு சேகரித்துவைத்துள்ளது.

இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையிலேயே தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவை ஐ.நா. நிபுணர் குழு சந்திக்கவுள்ளது. ஐ.நா.வின் தேவைகளுக்காக சர்வதேசம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் எமது இராணுவத்தை சிக்க வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது என்று ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கழுத்தை வெட்ட வருபவனுக்கு யாராவது வாளை தீட்டிக்கொடுப்பார்களா? இவ்வாறான புத்தி சாதுரியமற்ற செயலையே அரசாங்கம் செய்துள்ளது. எனவே ஐ.நா. நிபுணர் குழு இலங்கை வந்தால் நாம் தீர்க்கமான முடிவுகளை எடுக்க நேரிடும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமயவின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று செவ்வாய்க் கிழமை தேசிய நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையில் யுத்தம் காணப்பட்ட காலப்பகுதியில் புலிகளையும் அவர்களது போராட்டத்தையும் பாதுகாக்க அமெரிக்கா மற்றும் ஐ.நா. உள்ளிட்ட பல நாடுகள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டன. யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் புலிகளின் 47 தலைவர்களை பாதுகாக்க அமெரிக்காவின் போர்க் கப்பல் ஒன்று இலங்கைக்கு வரத்தயார் நிலையில் இருந்தது. இதற்கு முக்கிய பங்கு வகித்தவர் முன்னாள் அமெரி“க்க தூதுவராகயிருந்த ரொபட் ஒ பிளேக் ஆவார்.

இதைத்தவிர புலிகளின் தலைவர் பிரபாகரனை பாதுகாக்க பான் கீ மூன் நேரடியாகவே இலங்கை வந்திருந்தார். இதைத் தவிர எத்தனையோ சர்வதேச நபர்கள் இலங்கை வந்து பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், அனை அனைத்தையும் இராணுவ வீரர்களும் இந்த நாட்டின் தேசப்பற்றுள்ள சத்திகளும் தோற்கடித்தனர். தற்போது போர்க் குற்றங்களின் அடிப்படையில் இலங்கையின் இராணுவ மற்றும் அரச தலைவர்களை கைது செய்ய ஐ.நா. உள்ளிட்ட பல தரப்புகள் செயற்படுகின்றன. இதுவரையில் ஆயிரத்து 100 சாட்சியங்களை இலங்கைக்கு எதிராக ஐ.நா. நிபுணர் குழு சேகரித்துக் கொண்டுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் அரசாங்கம் மேற்படி நிபுணர் குழுவை இலங்கைக்கு அழைத்தமையானது ஏற்றுக்கொள்ளக் கூடிய தொன்றல்ல.

எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெற உள்ள மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் மிக வலுவான இலங்கைக்கு எதிரான அறிக்கையினை பான் கீ மூனின் நிபுணர் குழு சமர்ப்பிக்கும். இதனால் இலங்கை தப்பிக்க முடியாத நிலையில் போர்க் குற்றச் சாட்டுக்கள் சிக்கிவிடும். இவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்பட்டால் தற்போது எமக்கு உதவி செய்யும் நாடுகளால் உதவி செய்ய முடியாத நிலையே ஏற்படும்.

எனவே அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவினருடனான பான் கீ மூனின் நிபுணர் குழு சந்திப்பை உடனடியாக தடுத்து நிறுத்தி அக்குழுசார் உறுப்பினர்களை இலங்கைக்கு வர தடைவிதிக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால். தேசப்பற்றுள்ள கட்சி என்ற வகையில் தீர்க்கமான முடிவுகளை நாங்கள் எடுக்க வேண்டிய நிலை உருவாகும்.

பல தேவைகளுக்காக சர்வ÷ தசம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் சிக்க எமது இராணுவத்தை காட்டிக்கொடுக்க அரசாங்கம் முயற்சிக்க கூடாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக