22 டிசம்பர், 2010

விக்கிலீக்ஸ் விவகாரம் தொடர்பில் அமெரிக்க தூதுவருடன் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் பேச்சு





வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டேனிஸை நேற்று அழைத்து பேச்சு நடத்தியுள்ளார்.

விக்கிலீக்ஸ் விவகாரம் தொடர்பில் இந்த சந்திப்பின்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் அமெரிக்க செனட் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகியோர் ஹிலாரி கிளின்டனுக்கு அண்மையில் அனுப்பிய கடிதம் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. வெளிவிவார அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் செனட் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் அனுப்பிய கடிதம் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாட்டை அமைச்சர் அமெரிக்க தூதுவருக்கு விளக்கிக்கூறியுள்ளார்.

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் கடந்தகால தவறுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதற்கும் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காகவும் அந்த ஆணைக்குழு செய்யவுள்ள பரிந்துரைகள் தொடர்பிலும் அமைச்சர் அமெரிக்க தூதுவருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழு கொழும்பில் 35 அமர்வுகளை நடத்தியுள்ளதாகவும் 85 பேர் சாட்சியமளித்துள்ளதாகவும் மேலும் வடக்கு கிழக்கிலும் ஆணைக்குழுவின் அமர்வுகள் நடத்தப்பட்டுவருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழு கடந்த செப்டெம்பர் மாதம் இடைக்கால பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாகவும் அவற்றை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைசச்ர் பீரிஸ் அமெரிக்க தூதுவருக்கு கூறியுள்ளார்.

மேலும் இவ்வருடம் மே மாதம் அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்தித்து தான் பேச்சு நடத்தியதையும் அதன்போது நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்த கருத்து தொடர்பிலும் அமைச்சர் தூதுவரிடம் நினைவுகூறினார்.

இதேவேளை விக்கிலீக்ஸ் இணையதளம் ஊடாக அமெரிக்க தொடர்பு ஆவணங்கள் வெளிப்படுத்தப்பட்டமை தொடர்பிலும் அமெரிக்க தூதுவரும் வெளிவிவகார அமைச்சரும் கலந்துரையாடியுள்ளனர். இரகசிய தகவல்கள் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள் முடியாது என்பதே இலங்கையின் நிலைப்பாடாகும் என்று இதன்போது பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விக்கிலீக்ஸ் இணையதயளத்தில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார். குழந்தைகளை அடிமைகளாக விற்றல் சிறுவர்கள் முகாம்களில் வேலை செய்ததாகவும் சிறுமிகள் விபசாரத்துக்காக அனுப்ப்பபட்டதாகவும் வெளிவந்த தகவல்கள் இலங்கையை மதிப்பிழக்க செய்வதற்கக்ஷிக புனையப்பட்டவை என்றும் அவை உண்மைக்கு அப்பாற்பட்டவையாகும் என்றும் தெரிவித்துள்ளார். இவை இராஜதந்திர றோக்கங்களுக்கு எதிரான தகவல்கள் என்றும் இதன்போது தெரிவிக்க்பபட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக